Friday, June 19, 2009

'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்.

பால் சேர்க்காத 'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான
19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது. ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள்தன்மையை அதிகரிக்கின்றன.

தினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்தப்படுவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி.

Read more...

கவியரசின் வைரவரிகளில் இருந்து..


ஓ! என் சமகாலத் தோழர்களே!


கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லை

பாய்ந்து பரவும் இளைய நதிகளே
பள்ளம் நிரப்ப வாருங்கள்

காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்
கதிர்கள் சுமந்து தாருங்கள்

முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம்
முதுகில் சுமந்தால் போதாது
சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்தத்
துணிந்தால் துன்பம் வாராது

காட்டும் பொறுமை அடக்கம் என்னும்
கட்டுப்பாட்டைக் கடவாதீர்
கூட்டுப் புழுதான் பட்டுப் பூச்சியாய்க்
கோலம் கொள்ளும் மறவாதீர்

அறிவை மறந்த உணர்ச்சி என்பது
திரியை மறந்த தீயாகும்
எரியும் தீயை இழந்த திரிதான்
உணர்ச்சி தொலைந்த அறிவாகும்.

பழையவை எல்லாம் பழைமை அல்ல
பண்பும் அன்பும் பழையவைதாம்
இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க
இனமும் மொழியும் புதியவைதாம்

அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆழும் தமிழை நிறுத்துங்கள்
கரிகாலன்தன் பெருமை எல்லாம்
கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்

ஏவும் திசையில் அம்பைப் போல்
இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவு கணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள். VII

Read more...

Wednesday, June 17, 2009

அன்புக்கோர் அன்னை! - பத்மஜெகன்.


அன்பு தந்தாள்
அரவணைத்து காத்திட்டாள்! - அவள்
அருமைதனை
அருகிருந்து அறியவில்லை
பிரிந்திருந்தும் புரியவில்லை - நீ
பிரிந்திருந்தும் புரியவில்லை!

தெய்வமாய் அவளை நீ
வணங்கிடத் தேவையில்லை
உன்னில் ஓர்
அங்கமாய் வைத்து விடு - ஓர்
அங்கமாய் வைத்து விடு!

கண்னாக உனைக் காத்தாள்
கண்ணீர் தான் சுமந்து
கருணையால் உனை அணைத்தாள்
தேகம் மெலிந்தாலும் - தன்
தேகம் மெலிந்தாலும்
சோகம் தான் சுமந்தாலும்
சோர உன்னை விடமாட்டாள்
சுகமாய் வாழ வழிவகுத்தாள் - நீ
சுகமாய் வாழ வழிவகுத்தாள்!

அறிவில் நீ உயர்ந்திட்டால்
ஆனந்தம் தான் கொள்வாள்
ஆறு பிள்ளை பெற்றாலும் - அவள்
ஆறு பிள்ளை பெற்றாலும்
வேறுபாடு காட்டமாட்டாள்! -அங்கே
வேறுபாடு காட்டமாட்டாள்!

பிள்ளை உன்னை வளர்த்தெடுக்க
கண்களில் நீர் சுமந்தாள்
மெய்யினில் வலி சுமந்தாள்
பயிராய் நீ வளர
உரமாய் அவள் இருந்தாள்!
சான்றோனாய் நீ உயர
சக்தியெல்லாம் அவள் கொடுத்தாள்! -தன்
சக்தியெல்லாம் அவள் கொடுத்தாள்!!

உதிரத்தில் சுமந்தவளை - உன்னை
உதிரத்தில் சுமந்தவளை
பதறவே வைக்காதே!
கதறி அவள்
கலங்கவே வைக்காதே!!

கண்ணீரில் மிதந்தவளை - தினம்
கண்ணீரில் மிதந்தவளை
தண்ணீரில் ஒரு தாமரையாய் - இனி
தண்ணீரில் ஒரு தாமரையாய்
தலைநிமிர்ந்து அவள் சிரிக்க
தண்டாய் நீ இருந்து - தாமரைத்
தண்டாய் நீ இருந்து
தாயவளைக் காத்து விடு! - நல்ல
தனயன் என்று வாழ்ந்து விடு!

நன்றி: அதிரடி VII

Read more...

Tuesday, June 16, 2009

காந்தி சொன்னவை.. காத்திரமானவை.


* இயற்கை அன்னை ஒவ்வொருவனுக்கும் சாதாரண இன்ப வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களைத்தான் உற்பத்தி செய்கிறாள். மனிதன் வீணடிப்பதற்காக அவள் எதையும் உருவாக்குவதில்லை. யாராவது ஒருவன் தேவைக்கு மேல் தனக்கு என்று பயன்படுத்தினால் அடுத்தவனுக்கு அது இல்லாமல் போய்விடும். தேவைக்கு மேல் பயன்படுத்துபவன் என்னளவில் ஓர் கொள்ளைக்காரனே.

* சத்தியத்தை விட மேலான மதம் எதுவுமில்லை. கடவுள் என்பது வாய்மையும் அன்பும் தான்: கடவுள் என்பது ஒழுக்க நெறியும் அறவழியும்தான்: கடவுள் என்பது அச்சமின்மைதான்: கடவுள் என்பது மனச்சாட்சிதான்: நாத்திக வாதிகளும் இந்தக் கடவுளை மறக்க முடியாது.

* உலகில் தீண்டத்தகாதவர் என்று எவருமே இல்லை. ஒரே நெருப்பின் சுடரொளிதான் ஒவ்வொருவரும். மனிதராய் பிறந்த எவரையும் தீண்டத்தகாதவரென்று ஒதுக்கி வைப்பது பெருந்தவறான காரியம்.

Read more...

Thursday, June 11, 2009

ஞாபகத்திற்கு ஒரு நாட்டார் பாடல் - அறுவடைப் பாடல்.


ஆம்பிளைங்க கட்டும் வேட்டி ஏலேலக் குயிலே.
அசடுபட்ட வெள்ளை வேட்டி ஏலேலக் குயிலே.

பொம்பிளைங்க கட்டும் பட்டு ஏலேலக் குயிலே.
அழகான மஞ்சல் பட்டு ஏலேலக் குயிலே.

ஆம்பிளைங்க உண்ணும் சோறு ஏலேலக் குயிலே.
அடிச்சட்டி தீவச்சோறு ஏலேலக் குயிலே.

பொம்பிளைங்க உண்ணும் சோறு ஏலேலக் குயிலே.
பொழுதோட பொங்கற்சோறு ஏலேலக் குயிலே.

ஆம்பிளைங்க தேய்க்கும் எண்ணை ஏலேலக் குயிலே.
அசடுபட்ட தேங்காய் எண்ணை ஏலேலக் குயிலே.

பொம்பிளைங்க தேய்க்கும் எண்ணை ஏலேலக் குயிலே.
அழகான சம்பங்கி எண்ணை ஏலேலக் குயிலே.

ஆம்பிளைங்க வைக்கும் பொட்டு ஏலேலக் குயிலே.
அசடு பட்ட கருவப் பொட்டு ஏலேலக் குயிலே.

பொம்பிளைங்க வைக்கும் பொட்டு ஏலேலக் குயிலே.
அழகான சாந்துப் பொட்டு ஏலேலக் குயிலே.

Read more...

Wednesday, June 10, 2009

பாலருக்காக ஒரு பாடல்.

டிக் டிக் டிக் டிக் கடிகாரம்

காட்டுவேன் நானும் மணிநேரம்

மூன்று கம்பி நான் கொண்டே

ஓய்வில்லாமல் உழைப்பேனே

சோம்பல் கொண்ட மனிதா நீ

என்னைப் பாரு தினம் தோறும்

காலம் நேரம் பொன்னாகும்

கடமை உனது கண்ணாகும்!!
- கவிதா V.



Type rest of the post here

Read more...

Wednesday, March 18, 2009

இன்றைய அரும்புகள் நாளைய மலர்கள்.

வையகவாழ்வின் தெய்வீகத்தன்மையை, மனிதப்பிறவியின் புனிதத்தை தௌ;ளத்தெளிவாக விளக்கிக் காட்டுபவர்கள் நம் குழந்தைகள். அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் அழகு பளிச்சிடுகிறது.

அவர்களுடைய மழலைமொழி நம்முடைய மனத்திலே பேரானந்தத்தைச் சொரிகிறது அவர்களுடைய கொவ்வை இதழ்ச்சிரிப்பும், குறும்பும் கொண்டாட்டமும்,
குதூகலிப்பும் நம்முடைய கண்களுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தாய் இருக்கின்றன.

அவர்களைப் பார்க்கும் பொழுது:

மண்ணில் உலாவரும் வெண்ணிலாவே!
கண்ணைக் கவர்ந்திழுக்கும் கவின் மலரே!
எண்ணத்தில் எழுந்திடும் இன்பஊற்றே!
வண்ணக்களஞ்சியமே! வாழ்வின் பெரும்பேறே!


என்று பரவசமடைந்து பாராட்டுகின்றோம்.

குழந்தைகள் ஆண்டவனின் வடிவங்கள். அன்பு நம்பிக்கை அமைதி ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக ஆண்டவன் அவர்களை அனுப்பிவைத்திருக்கிறான்.
என்று அமெரிக்க கவிஞர் James Russell Lowell கூறியுள்ளார்.

சின்னஞ்சிறு கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகே இருப்பதைப்போன்று சின்னஞ்சிறு குழந்தைகள் இறைவனுக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள் என்பது ஜேர்மனிய நாவலாசிரியர் Jean Paul Richter அவர்களின் மணிமொழியாகும்.

குழந்தைகள் கடந்த காலத்தை நினைத்து வருந்துவதில்லை. எதிர்காலக் கற்பனையில் வீணாக மிதப்பதில்லை. நிகழ்காலத்திலேயே வாழ்கிறார்கள். அதனையே அநுபவிக்கிறார்கள்.

கடந்தகாலம் திரும்பி வராது. எதிர்காலம் உறுதியானதல்ல. நிகழ்காலமே நிச்சயமானது.
எனவே நிகழ்காலத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டு செயற்படுவதே அறிவுடமை.

உலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசி வேறுபட்ட ஆடைகளை அணிந்து புறத்தோற்றத்தில் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்களே! அவர்கள் கூடி விளையாடி சண்டைபோட்டு பின் சேர்ந்துகொள்வார்கள். அவர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்வதில்லை. அவர்கள் தங்கள் பெற்றோர்களை விட ஞானமுடையவர்கள். அவர்கள் வளரும் போது துரதிஸ்டவசமாக மூத்தோருடைய முறையற்ற போதனைகளாலும் நடத்தைகளாலும் அவர்களின் இயற்கைஞானம் மங்கி விடுகிறது. பள்ளியில் அவர்கள் பயனுடைய பல விடயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அன்போடும் மனிதாபிமானத்தோடும் வாழ்ந்து வாழ்க்கையை தமக்கும் மற்றவர்களுக்கும் பயனுடையதாக ஆக்கிக்கொள்வதே அடிப்படையான விடயம் என்பதை அவர்கள் நாளாவட்டத்தில் மறந்து விடுகிறார்கள்.

இன்றைய அரும்புகள் நாளைய மலர்கள்; இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள். அவர்களைச் சிறந்த முறையில் வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். குழந்தைகளை நல்லவர்களாக்குவதற்கு சிறந்த வழி அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச்செய்வதே ஆகும். (சிந்தனைக் கோவையிலிருந்து..)

Read more...

I Like the Flowers - by Beat Boppers Children's Music

chitra`s tamil songs

My Lucky Day - Cool Tunes for Kids by Eric Herman

vijay`s tamil songs

Childrens Song

ilayarajah`s tamil hits

About This Blog